பெரியநீலாவணை தொடர்மாடியில் சிகரம் கல்வி நிலையத்தின் மூலம் நடாத்தப்படும் இலவச வகுப்பில் கலந்துகொள்ளும் மாணவர்களது சிறுவர்தின நிகழ்வு சிகரம் கல்விநிலையத்தின் தலைவர் இ.சந்திரசேகரம் தலைமையில் சனிக்கிழமை இடம்பெற்றது.
பிள்ளைகளைப் பாதுகாப்போம் சமமாக நடாத்துவோம். எனும் தொனிப் பொருளின் கீழ் சர்வதேச சிறுவர் தின நிகழ்வானது நடைபெற்றது.
இதன்போது விளையாட்டுநிகழ்வுகள் இடம்பெற்று அனைத்து மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன
இந்நிகழ்வில் கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி என்.ரமேஸ் கிராமசேவகர் வ. கார்திக் ஓய்வுபெற்றபொதுச்சுகாதார பரிசோதகர் களுகாசனம் பாவாணர் அக்கரைப்பாக்கியன் சிகரம் கல்விநிலைய அதிபர் வெ.தங்கவேல் மற்றும் கற்பிக்கும் ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர்
Post A Comment:
0 comments so far,add yours