எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பில் இலங்கை இராணுவத்தின் 75 வது வருட பூர்த்தியினையும் சர்வதேச சுற்றுலா தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி கல்லடி பகுதியில் சுற்றூலா பயணிகளுக்கான பெயர் பலகையை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனினால் இன்று (08) திறந்து வைத்தார்.
அம்கோர் நிறுவனத்தின் நிதி அனுசரனையில் 243 படைப்பிரிவின் பங்களிப்புடன் இவ் பெயர் பலகை நிர்மானிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வரும் வெளிநாட்டு மற்றும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளிகளுக்கு இப் பிரதேசத்தில் உள்ள இடங்களை இழகுவில் அடையாளம் கண்டு கொள்வதற்கு இவ் பெயர் பலகை திறந்து வைக்கப்படுகின்றது.
இந் நிகழ்வில் 243 படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சந்திம குமாரசிங்க, கெனல் தம்மிக்க, அம்கோர் நிறுவன பணிப்பாளர் ப.முரளிதரன்,
மட்டக்களப்பு மாவட்ட சுற்றுலாத்துறை அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஏ. விவேகானந்தன் என பலர் கலந்து கொண்டனர்.
இலங்கை இராணத்தின் 243 படைப்பிரிவினர் மாவட்டத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கும் நகரினை அழகுபடுத்துவதற்கும் பாரிய சேவை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post A Comment:
0 comments so far,add yours