(சுமன்)
புளியந்தீவு ரிதம்
சனசமூக நிலையம் மற்றும் ரிதம் இளைஞர் கழகம் என்பவற்றின் ஏற்பாட்டில் தமிழர்
திருநாளாம் தைத்திருநாளை சிறப்பிக்கும் முகமாக பொங்கல் நிகழ்வு இன்றைய
தினம் ரிதம் இளைஞர் கழகத் தலைவர் சா.சஜிந் மற்றும் செயலாளர் டி.டினுசிக்கா
ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில்
கிழக்குப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் பிரதி உபவேந்தரும், ரிதம் சனசமூக
நிலையத்தின் தலைவருமான வைத்திய கலாநிதி கே.கருணாகரன் சிறப்பு அதிதியாகக்
கலந்து கொண்டதுடன், மண்முனை வடக்குப் பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர்,
முன்னாள் மாநகரசபை உறுப்பினர் அ.கிருரஜன், ரிதம் சனசமூக நிலைய நிருவாகிகள்,
ரிதம் இளைஞர் கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் சிறுவர்கள் எனப் பலரும்
கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours