( வி.ரி.சகாதேவராஜா)

 உலகெலாம் ஜீவசேவை ஆற்றிவரும் இராமகிருஷ்ண மிஷனை ஸ்தாபித்த சுவாமி விவேகானந்தரின் 163வது ஜெயந்தி தினத்தையொட்டி, அவர் பெயரில் ஆரம்பித்த கிரான் குளம் விவேகானந்த பூங்காவில் பணிக்கு பாராட்டு எனும் நிகழ்வு இடம்பெற்றது வருகிறது.



விவேகானந்த பூங்கா பணிக்கு உதவி வழங்குகின்றவர்களை அல்லது அவர்களது பெற்றோர்களை விசேட தினங்களில்  கெளரவிப்போம் என்ற செயற்திட்டத்தை  விவேகானந்த பூங்கா ஸ்தாபகர் பிரபல சமூக செயற்பாட்டாளர் கந்தப்பன் சற்குணேஸ்வரன் முன்னெடுத்து வருகிறார்.

சமூக நலன்புரி ஒன்றியம் விவேகானந்த தொழில்நுட்ப கல்லூரி 
முல்லைத்தீவு அன்னை சாரதா இல்லம் மட்டக்களப்பு திலகவதியார் மகளிர் இல்லம் போன்ற பல சமூகநோக்குடைய அமைப்புக்களை உருவாக்கி ஜீவ சேவையாற்றி வரும் க.சற்குணேஸ்வரன் அண்மையில் கிரான் குளம் விவேகானந்த பூங்காவை பிரமாண்டமான முறையில் ஸ்தாபித்தார்.

அப் பூங்காவில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து பல பரோபகாரிகள் பல விதங்களில் உதவியுள்ளார்கள்.

அவர்களை பூங்காவிற்கு வரவழைத்து பாராட்டிக் கௌரவிக்கின்ற கைங்கர்யம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் சுவாமி விவேகானந்தரின் 163 வது  ஜனன தினத்தில் நாவிதன்வெளியைச் சேர்ந்த திருமதி சேத்ரபதி சிதம்பரபிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினர் மாலை சூடி கௌரவிக்கப்பட்டனர்.
லண்டனில் உள்ள சிதம்பரப்பிள்ளை
தேவகாந்தன் பூங்காவில் ஒரு கட்டடத்தை அமைக்க உதவியிருந்தார்.
அதற்காக அவரது தாயார் கௌரவிக்கப்பட்டார்.

இப்படியான பல பணிகளுக்கு மேலும் உதவிகள் தேவையாக உள்ளதால் நீங்களும் உதவலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours