(வி.ரி.சகாதேவராஜா)


மட்டக்களப்பு செட்டிபாளையம்  சிவன் ஆலய  
மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 05 ஆம் தேதி புதன்கிழமை கர்மாரம்பத்துடன் ஆரம்பமாகிற து.

எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம் எதிர்வரும் 7 ஆம் 8 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் மறுநாள் 09 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேக பிரதம குரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தமூர்த்தி குருக்கள் முன்னிலையில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ க.ஜனார்த்தனன் சர்மா தலைமையில் நடைபெறவுள்ளது.

தொடர்ந்து மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்று 20 ஆம் தேதி 1008 சங்காபிஷேகத்துடன் நிறைவடையும் என ஆலய பரிபாலன சபையின் செயலாளர் ம.புவிதரன் தெரிவித்தார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours