(ஆ.நிதாகரன்)
மட்/பட்/காந்திபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் இலண்டனை தலைமையகமாக கொண்டியங்கும்இமயம் அமைப்பின் அனுசரணையுடன் அதன் உறுப்பினர் ஒருவரின் பிறந்த தினத்தையொட்டி வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவருக்கான துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு இப்பாடசாலை அதிபர் சா.சத்தியசீலன் தலைமையில் இன்று(24) பாடசாலையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இமயம் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எஸ்.சசிக்குமார்,ஆசிரியர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours