(க.விஜயரெத்தினம்)
சுவாமி விபுலானந்த அடிகளாரின் 133 ஆவது ஜனன தின நிகழ்வு சனிக்கிழமை(3) மட்டக்களப்பு  கல்லடி-உப்போடை விபுலானந்த மணி மண்டப  வளாகத்தில் உள்ள    அடிகளாரின் சமாதியில் இடம் பெற்றது .

இராமகிருஷ்ண மிஷன் துறவியும் ,முத்தமிழ்  வித்தகரும்,சிவானந்தா வித்தியாலய ஸ்தாபகருமான சுவாமி விபுலானந்தரின் 133வது பிறந்த தினத்தை முன்னிட்டு கல்லடி-உப்போடை விபுலானந்த மணி மண்டபத்திலுள்ள அடிகளாரின் சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு இராமகிருஷ்ண மிஷன் பொது மேலாளர் சுவாமி நீலமாதவானந்தாஜி மகராஜ் தலைமையில் இடம் பெற்றது .


இந்நிகழ்வில் விபுலானந்த பக்தர்கள் ,கல்விமான்கள் ,மாணவர்கள் ,சமூக ஆர்வலர்கள் ,விபுலானந்தர் சபையினர் கலந்து கொண்டு அன்னாரை நினைவுகூர்ந்து அவர்பாடிய பாடல்களை பாடியும்  அன்னாரின் சமாதிக்கு மலர்மாலை அணிவித்தும்,அவரை வணங்கி வழிபட்டார்கள்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours