எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழரசுக்கட்சியில் மண்முனை தென்எருவில் பற்று பிரதேசசபையின் துறைநீலாவணை வட்டாரத்தில் போட்டியிடும் சு.இளமாறன் ,கு.ஆயிசான் ஆகியோரை ஆதரித்து நடைபெற்ற பிரச்சாரக் கூட்டம் தமிழரசுக்கட்சியின் துறைநீலாவணை வட்டாரக்கிளைத் தலைவர் த.கணேசமூர்த்தி தலைமையில் பொது விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை இடம்பெற்றது.

இக்கூட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  இரா.சாணக்கியன் ,டொக்டர் இ.சிறிநாத் ,ஞா.சிறிநேசன் மற்றும் துறைநீலாவணைக்கிராமத்தில் இருக்கும் தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.










Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours