( வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய அலங்கார உற்சவ திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ஆலய வருடாந்த அலங்கார உற்சவ திருவிழா ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் தலைமையில் ஆலய குரு சிவஸ்ரீ சபா கோவர்த்தன சர்மாவின் ஒத்துழைப்புடன் சிறப்பான முறையில் இடம்பெற்று வருகின்றது.

கடந்த இரண்டாம் திகதி ஆரம்பமான இவ் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 12 ஆம் தேதி சித்ரா பௌர்ணமி அன்று சமுத்திர தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையும்.

நாளை 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பாற்குட பவனி இடம் பெறும்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours