எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு, சின்ன ஊறணி பகுதியில் வீடொன்றினுள் இருந்து 6 அடி நீளமான முதலையொன்று நேற்று இரவு (06) செவ்வாய்க்கிழமை பொது மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
நள்ளிரவில் கடும் போராட்டத்திற்கு மத்தியில் குறித்த முதலையை மடக்கி பிடித்துள்ளனர்.
கடந்த ஓரிரு தினங்களாக பெய்த மழை காரணத்தால் வாவிகள் மற்றும் குளங்களில் நீர் நிறம்பி காணப்படுவதனால் அவற்றிலிருந்து முதலைகள் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்களை நோக்கி வருதாக குறித்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
சின்ன ஊறணி கிராம மக்கள் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தெரிவித்ததை அடுத்து அவர்கள் வருகை தந்து கட்டி வைத்திருந்த முதலையை எடுத்துச் சென்று மக்கள் நடமாட்டமற்ற பகுதியில் விடுவித்துள்ளனர்.
Post A Comment:
0 comments so far,add yours