(சுமன்)

.

மட்டக்களப்பு மாநகரசபையின் 08 வது சபையின் இரண்டாவது பொதுக் கூட்டம் இன்றைய தினம் மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் மாநகர சபா மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது மாநகரசபை பிரதி முதல்வர் வை.தினேஸ்குமார், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர், பிரதி ஆணையாளர், கணக்காளர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

2025 உள்ளூராட்சி தேர்தலில் பின்னர் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வசமாகிய மட்டக்களப்பு மாநகர சபையின் கன்னி அமர்வாக இன்றைய தினம் இந்த அமர்வு இடம்பெற்றது.

இதன்போது மாநகர முதல்வரின் கன்னி உரை, மாநகரசபை நிர்வாகம் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பான அதிகாரப் பகிர்வு, மாநகரசபை நிலையியற் குழுக்களுக்கான உறுப்பினர்கள் தெரிவு உள்ளிட்ட பூர்வாங்க நடவடிக்ககள் தொடர்பான தீர்மானங்கம் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours