பாறுக் ஷிஹான்
 
அறநெறி பாடசாலையின் மாணவர்களுக்காக, ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ஒரு சிறப்பு ஆன்மீக சொற்பொழிவுப் பயிற்சிப் பட்டறை சிறப்பாக நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வை நெறிப்படுத்தியவர், இலங்கை நடிகையும் ஆன்மீக சொற்பொழிவாளருமான செல்வி. றுத்றா அமிர்தரெத்தினம். இவர், இலங்கையில் ஒரே ஒரு பெண் ஹரி கதா பிரசங்கக் கலைஞராகவும், கலையும் ஆன்மீகமும் ஒருங்கிணைந்த தனிச்சிறப்பான ஆளுமையாகவும் விளங்கி வருகிறார்.

மாணவர்களின் மனங்களில் ஆன்மீகம், கலாசாரம் மற்றும் சமூகவிழிப்புணர்வை ஊட்டும் வகையில், அவர் வழங்கிய இச்சிறப்புப் பயிற்சி, மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பையும் உணர்வுபூர்வமான எதிர்வினையையும் பெற்றது.

பயிற்சியில் மாணவர்கள் ஆழமான செவிமடுக்கையும் ஆனந்த அனுபவங்களையும் பகிர்ந்தனர்.
இந்நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்து, ஒத்துழைத்த அனைவருக்கும்,

“வழிகாட்டியதெல்லாம் நாராயணரின் அருள் வழியே…”என்ற நம்பிக்கையோடு செல்வி. றுத்றா அமிர்தரெத்தினம்  தனது மனநிறைவான நன்றிகளை தெரிவித்தார்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours