சா.நடனசபேசன்

சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட அல் அர்ஷத் மகாவித்தியாலயம் வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்துடன் இணைந்து இன ஒற்றுமையினை முன்னிலைப்படுத்தி சகோதர சங்கம நிகழ்வு வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் பிரதி அதிபர் எம்.தருமலிங்கம் தலைமையில் 24 ஆம்திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இச்சங்கம நிகழ்வில். அல்அர்ஷத் மகாவித்தியாலயம் ,வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயம் கொலிக்கிறோஸ் மகாவித்தியாலயங்களில் கல்விபயிலும் மாணவர்கள் கலந்துசிறப்பித்திருந்தனர்.


இந்நிகழ்வுக்குப் பிரதம அதிதியாக சம்மாந்துறை கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர் எச்.நைரோஸ்கான்  வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தின் வலுவூட்டப்பட்ட பாடசாலை மேம்பாட்டு உத்தியோகத்தர் சா.மோகன் அல் அர்ஷத் மகாவித்தியாலய அதிபர்  எம். அப்துல் றகீம், வலயக்கல்வி அலுவலகத்தின் வளவாளர்கள் மூன்று பாடசாலைகளின் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.


















Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours