அபு அலா 

நிலாவெளி - கோபாலபுரம் மாவட்ட சித்த ஆயுர்வேத வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் கழிவுகளை தரம் பிரித்து சேகரிப்பு செய்வதற்கான தொட்டிகளை குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.முபாறக் (09) வழங்கி வைத்தார்.

வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் என்.நிரஞ்சன் இதுதொடர்பில் விடுத்த வேண்டுகோளுக்கமைவாகபிரதேச சபையின் உறுப்பினர் ஜே.நிமலகாசனின் முயற்சியின் பயனாக
இந்தக் கழிவுகள் சேகரிக்கும் தொட்டிகளை குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.முபாறகினால் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இதனை மிகத் துரிதமாக வழங்கி வைத்த குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.முபாறக் அவர்களுக்கும், அதற்கு துணை நின்றவர்களுக்கும் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் என்.நிரஞ்சன் நன்றிகளைத் தெரிவித்தார்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours