(  வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பில் இயக்கிவரும்  அமெரிக்க சர்வதேச பல்கலைக்கழகத்தில் கல்முனை றோட்டரிக்கழகத்தின்
அனுசரணையில் 
 வசதி குறைந்த பதினேழு மாணவர்களுக்கு  இலவசமாக இரண்டு கற்கை நெறிகள் நேற்று ஆரம்பித்துவைக்கப்பட்டன.

2025/26 ம் வருட புதிய தலைவர் ரொட்டரியன் இ. தரணிதரனின் வழிகாட்டலில் நடைபெறும் 
ஆங்கில டிப்ளோமா ( Diploma in English), மற்றும் அடிப்படை தகவல் தொழில் நுட்ப  கற்கை நெறி (Basic (Information Tecnology)ஆகியவற்றிற்கு கன்பேரா றோட்டரிக்கழகம்,  அவுஸ்திரேலிய, கன்பேரா தமிழ்ச் சங்கம் என்பன (680,000/-)நிதிவழங்குகின்றன.

 வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்ட இந் நிகழ்வில் கழகத்தின் செயலாளர் ரோட்டரியன் மு. சிவபாதசுந்தரம், ரோட்டரியன் க. குகதாஸ் ,கழக பயிற்றுவிப்பாளர் , பல்கலைக்கழக விரிவுரையாளர் எஸ், ஜெபகுமார், முகாமையாளர்  -அகமட் சப்ரி மற்றும் உத்தியோகத்தர்களும் பங்குபற்றினர்,



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours