இலங்கை அரசாங்கத்தினால் தேசிய ரீதியாக முன்னெடுக்கப்படுகின்ற தூய்மையான இலங்கையினைக் கட்டியெழுப்பும் (கிளீன் சிறிலங்கா) நோக்கினால் ஒரு நாள் செயற்றிட்டத்தினை பாடசாலைகள்இ பிரிவெனாக்கள்இகல்வியற் கல்லூரிகளில் நடைமுறைப்படுத்துவதற்கான வெளிப்படுத்தல் செயற்றிட்டமானது புதன்கிழமை (9) தேசிய ரீதியாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் அதிபர் கே.தியாகராஜா தலைமையில் இடம்பெற்றது
இதன் போது பாடசாலை வளாகம் முழுமையாக துப்பரவு செய்யப்பட்டதுடன் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் தொடர்பான காணொளிகள்இவிழிப்பூட்டல் மரம் நடுகைஇ செயற்றிட்டம் தொடர்பான விடயங்கள் தெளிவூட்டல் நடைபெற்றதுடன் இச் செயற்பாட்டிற்கு வேப்பையடி இராணுவ முகாமில் உள்ள இராணுவத்தினர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.














Post A Comment:
0 comments so far,add yours