( வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்றுப்பிரசித்தி
பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த
ஆடிஅமாவாசை உற்சவ தீர்த்தோற்சவம் (24) வியாழக்கிழமை சமுத்திரத்தில்
மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
ஆலய பரிபாலன சபையின் தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தலைமையில் நடைபெற்ற
இத்
தீர்தோறங ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் முன்னிலையில்
ஆலயகுரு சிவஸ்ரீ நீதி. அங்குச நாதக்குருக்கள் தலைமையில்
கோலாகலமாகநடைபெற்றது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
தீர்த்த தினம் முன்னோர்களுக்கான பிதிர்க்கடன் செலுத்தும் முக்கியமான கிரியை அங்கு நடைபெறுவது வழமையாகும்.
இன்று25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பூங்காவனத்திருவிழா வள்ளி திருமணமும் நடைபெறும்.




Post A Comment:
0 comments so far,add yours