(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சாய்ந்தமருதில் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று இன்று 09ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணியிலிருந்து  சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்திற்கு முன்பாக உள்ள சுகாதார நிலையத்தில் இடம்பெற்று வருகிறது.

எஸ்.பி. பௌண்டேஸன், ரியல் ப்ளாஸ்டர் விளையாட்டு கழகம் மற்றும் ஸ்ரீலங்கா யுனைட்ஸ் ஆகிய அமைப்பினர் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இவ் உயிர் காக்கும் உயரிய  பணியில் ஆண், பெண் இருபாலரும் கலந்து கொண்டு இன்று மாலை 04.00 மணிவரை இரத்ததானம் வழங்க முடியும் என்றும் எனவே, இரத்ததானம் வழங்க இருப்பவர்கள் அவசரமாக முன்வந்து இரத்ததானத்தை வழங்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு  விடுத்துள்ளனர்.

மேலதிக தொடர்புகளுக்கு
0773394133 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours