(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கல்முனை அல்- ஹுஸைனியா முன்பள்ளி பாலர் பாடசாலை ஆண்டுதோறும் நடாத்திவரும் அந்தப் பாடசாலை மாணவர்களுடைய சிறுவர் சந்தை நிகழ்வு கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலத்தில் நேற்று (09) சனிக்கிழமை இடம்பெற்றது.

முன்னாள் மக்கள் தோட்ட அபிவிருத்தி பிரதியமைச்சரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி  எஸ். நிஜாமுதீன் நிகழ்வில் பிரதம அதிதியாகவும் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் லக்ஸ்டோ மீடியாவின் தலைவருமான ஏ.எல். அன்ஸார் நிகழ்வில் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.

இதில் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours