\
தடம் அறக்கட்டளை அமைப்பால் தாந்தா முருகன் ஆலய பாத யாத்திரை மேற்கொள்ளும் அடியவர்களுக்கு தண்ணீர்ப் போத்தல்கள் வழங்கி வைப்பு
தமிழ்
தேசிய உணர்வாளன் பெரியகல்லாற்றை சேர்ந்த அவுஸ்திரேலியா வாழ் நிரஞ்சன்
தனது தாயின் நினைவாக " தடம் " அறக்கட்டளை எனும் அமைப்பை உருவாக்கி அதன்
ஊடாக பல சமூக சேவையினை செய்து வருகின்றார்.
இன்றைய
தினம் வியாக்கிழமை ( 07.08. 2025 ) தாந்தாமலை சிறி முருகன் ஆலயம் நோக்கி
பாதபாத்திரை வரும் பத்தர்களுக்கு 5 ஆயிரம் தண்ணீர் போத்தல்கள் விநியோகம்
செய்தார் .
இது மட்டுமன்றி இவர் தனது ஊரில் மரணம்
ஏற்படும் வீடுகளுக்கு போதியளவு குடிநீர் , உதவிகள், பண தொகை 5000/=
அத்தோடு கொட்டகைகள் , கதிரைகளையும் போன்றவற்றையும் இலவசமாக நீண்ட காலமாக
தொடர்ச்சியாக வழங்கி வருகின்றார.அத்தோடு தனது " தடம் " அமைப்பின் ஊடாக
தரம் - 5 மாணவர்களுக்கான உதவி தொகை வழங்குதல் , வாழ்வாதார உதவிகள் , வறிய
மாணவர்களுக்கு கல்விக்கான கொடுப்பனவுகள் , வறிய நோயுற்றவர்களுக்கான
மருத்துவ உதவிகள் என பல உதவிகளைச் செய்து வருகின்றமையும் குறிப்பிட
தக்கதாகும்.




Post A Comment:
0 comments so far,add yours