நிலையான
அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல்முனையின் 3வது வருடம் நிறைவினை
முன்னிட்டு கல்முனை மாநகரில் (6) புதன்கிழமை காலை அமைதி வழி
போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு
கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை
வலியுறுத்தி இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டதுடன் இதன்போது மக்கள் பதாதைகளை
ஏந்தி அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்
போது நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல்முனையின் 3வது வருடம்
குறித்து வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் ஊடக வெளியீடு
ஒன்றினையும் வெளியிட்டுள்ளனர்.

Post A Comment:
0 comments so far,add yours