நூருல் ஹுதா உமர்
இது தொடர்பில் கலந்துரையாடலொன்று நேற்று (21) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ.திசாநாயக் க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் எஸ்.கரன், நிருவாக உத்தியோகத்தர் எஸ்.எம்.றியாஸ், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரிவு தலைவர்கள், சுகாதார அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களின் தலைவர்கள், மருத்துவ முகாமுடன் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




Post A Comment:
0 comments so far,add yours