சுமன்)


வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையான அதிகாரப்பகிர்வே அவசியம் என வலியுறுத்தும் முகமாக  03 வது வருடமாக முன்னெடுக்கப்பட்டு வரும் 100 நாள் செயல்முனைவின் 04 நாள் கவனயீர்ப்பு போராட்டமானது இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு வாகரை புச்சாக்கேணி கட்டுமுறிவு சந்தியில் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் வாகரை பிரதேச பொதுமக்கள், வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது இலங்கை அரசே இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத சமஷ்டி முறையான அதிகாரப்பகிர்வை உறுதி செய்க, சமஷ்டியே தீர்வு, எங்கள் வளம் எங்கள் உரிமை போன்ற வாசகங்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டதுடன், 100 நாள் செயல்முனைவு தொடர்பான அறிக்கையும் பிரசுரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours