பாறுக் ஷிஹான்

கல்முனைப் பிரதேச செயலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முன்னரங்கு சேவை பிரிவு உத்தியோகபூர்வமாக திறந்து இன்று (11)  வைக்கப்பட்டது.

இந்நிகழ்வானது கல்முனை பிரதேச செயலாளர் சட்டத்தரணி ரீ.எம்.எம்.அன்சார்  தலைமையில் நடைபெற்றதுடன்   பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரம கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

Smile desk டிஜிடல் சேவை திறந்த வைக்கும் நிகழ்வில் முதலில் இறைவணக்கம்  உட்பட தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
பின்னர் நிகழ்வில்  வரவேற்பு உரை மற்றும் தலைமை உரையினை  கல்முனை பிரதேச செயலாளர் சட்டத்தரணி ரீ.எம்.எம்.அன்சார் மேற்கொண்டார்.

Smile desk  டிஜிடல்  சேவை தொடர்பான அறிமுக நிகழ்வை அபிவிருத்தி உத்தியோகத்தர் அகாஸ் மற்றும் தகவல் தொழிநுட்ப உத்தியோகத்தர் பர்கானா ஆகியொர் மேற்கொண்டனர்.

இந்நிகழ்வில் ஏனைய அதிதிகளாக கல்முனை மாநகர சபையின் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், அம்பாறை மாவட்ட பிரதம கணக்காளர் யு.எல்.மஹ்ரூப் ,கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின்  செயலாளராக இருந்து ஒய்வு பெற்ற  எம்.எம். நஸீர்,பிரதேச செயலக  நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம் .பளீல், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர் , சமூர்த்தி தலைமை பீட  சிரேஷ்ட முகாமையாளர், உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இறுதியாக நன்றியுரையுடன் இந்நிகழ்வு சிறப்பாக நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours