( வி.ரி.சகாதேவராஜா)
நேற்று வெளியான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின்படி 
மட்டக்களப்பு நகரப் பாடசாலைகளில் புனித மைக்கேல் கல்லூரி அதிகூடிய 52 சித்திகளைப் பெற்று முன்னணியில் திகழ்கிறது.

மட்டக்களப்பு நகரப் பாடசாலைகளில் மட்/புனித மிக்கேல் கல்லூரி -52,
மட்/வின்சென்ட் மகளிர் கல்லூரி -47,
மட்/கோட்டை முனை கனிஷ்ட வித்தியாலயம் -42,
மட் /புனித சிசிலியா மகளிர் கல்லூரி -35,
மட் /மெதடிஸ்த மத்திய கல்லூரி -28 எனத் தொடர்கிறது.

மட்டக்களப்பு நகர பாடசாலைகளில் மிகவும் அதிகூடிய புள்ளியாக 180 புள்ளி   திகழ்கிறது. அந்த அதிகூடிய 180 புள்ளிகளைப்பெற்ற சாதனை மாணவன் யோகேஸ்வரராஜா பிரணவ் காரைதீவைச் சேர்ந்தவராவார்.

புனித மைக்கேல் கல்லூரியில் இம்முறை  128 மாணவர்கள் தோற்றி  52 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours