சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் நடைபெறாத பாடங்களுக்கான நேர அட்டவணை இன்று (10) பிற்பகல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, நடைபெறாத பாடங்களை 2026 ஜனவரி மாதம் 12 ஆம் திகதி முதல் ஜனவரி 20 ஆம் திகதி வரை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஐந்து மாகாணங்களிலும் சுமார் ஒரு இலட்சம் (101,000) மாணவர்கள் உயர்தரப் பரீட்சை எழுதுகின்றனர்.இவர்களில் திடீர் பேரழிவு காரணமாக இறந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும், மேலும் சிலர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.மேலும், உயர்தரப் பரீட்சை நடைபெற்ற திகதிகளில் பரீட்சை எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளதாகவும், ஆரம்ப மதிப்பீடு பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
அத்துடன் 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் எதிர்வரும் பெப்ரவரி 14 முதல் மார்ச் 02ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


Post A Comment:
0 comments so far,add yours