சீரற்ற காலநிலை காரணமாக தித்வா புயலின் தாக்கத்தினால் நாட்டில் ஏற்பட்ட பேரழிவில் பாதிக்கப்பட்ட மூதுர் பிரதேச பாடசாலைகளை துப்பரவுசெய்யும் பணியில் சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலய ஆசிரியர்கள் 8 ஆம்திகதி திங்கட்கிழமையில் இருந்து ஈடுபட்டு வருகின்றனர்
;மாவிலாறு உடைப்பெடுத்ததன் காரணமாக மூதுர் வெருகல் பகுதிகள் முற்றாக நீரில் மூழ்கி இருந்தன இந்தப்பகுதிகளில் உள்ள பாடசாலைகளை தூய்மைப்படுத்தும் பணிகளை வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலய அதிபர் கே.தியாகராஜா தலைமையில் பழையமாணவர்சங்கத்தின் பொருளாளர் தி.நந்தகுமார் மற்றும் ஆசிரியர்கள் சிரமதானம் மூலம் துப்பரவு செய்துவருகின்றனர்.




Post A Comment:
0 comments so far,add yours