( வீ.ரி.சகாதேவராஜா)
காரைதீவு
விளையாட்டுக் கழகத்தினர் "பீச் கிளீன் அப் கம்பெயின்" (Beach clean up
campaign) என்கின்ற தொனிப்பொருளில் சிரமதானத்தை மேற்கொண்டு காரைதீவு
கடற்கரையை நேற்று சுத்தப்படுத்தினார்கள் .
நடப்பு
ஆண்டுக்குரிய கழகத்தலைவர் முன்னாள் தவிசாளர் வை .கோபிகாந்த் தலைமையில்
இந்த சுத்தப்படுத்தும் சிரமதானம் சுயமாக முன்வந்த கழக வீரர்களால் சிறப்பாக
முன்னெடுக்கப்பட்டது.
நீண்ட காலமாக கவனிப்பாரின்றி குவிந்து கிடந்த பிளாஸ்டிக் பாத்திரங்கள் மற்றும் குப்பைகளை இந்த இளைஞர்கள் அகற்றினார்கள்.





Post A Comment:
0 comments so far,add yours