(எஸ்.அஷ்ரப்கான்)

கல்முனை "பிரன்ட்ஸ்" பெளண்டேசன் இன் இரண்டு ஆண்டுகள் நிறைவையொட்டி ரீ சேர்ட் அறிமுக நிகழ்வு நேற்று மாலை (23) பாலமுனை பூட் பார்க் உணவகத்தில் இடம் பெற்றது.


றிஸ்மின் எக்ஸ்போ பிறை வட் லிமிடெட்  உரிமையாளரும் அமைப்பின் உயர்பீட உறுப்பினருமான எஸ்.றிஸ்மின்  தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கொஸ்மோ குறூப் ஒப் கம்பனி  நிறைவேற்று பணிப்பாளர் எஸ்.எம்.அர்ஹம் கலந்து கொண்டார்.

பிரதம அதிதிக்கு அமைப்பின் செயலாளர் எம்.எஸ்.எம்.சர்ஜுனால்  நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், அமைப்பின் அங்கத்தவர்களுக்கு ரீ சேர்ட் அறிமுகம் செய்து வழங்கி வைக்கப்பட்டது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours