(ரஞ்சன்)
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர், கௌரவ காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி அவர்கள், இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலர் மன்னர் சல்மானிடம் இருந்து 50 டன் பேரீச்சம்பழங்களை, மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையத்தின் (KSrelief) ஊடாக இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கிவைத்தார்.இந்நிகழ்வின் போது இலங்கை மத மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான துணை அமைச்சர் கௌரவ முனீர் முலவ்பர் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக இப் பேரீச்சம்பழங்கள் கையளிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில், வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துணை அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, இலங்கை பாராளுமன்ற துணை சபாநாயகர் கலாநிதி ரிஸ்வி சாலிஹ் அவர்கள் உட்பட இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள், அரச அதிகாரிகள் மற்றும் KS Relief பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.




.jpeg)
Post A Comment:
0 comments so far,add yours