உலகெங்கும் வாழும் இந்துக்களால் சிவனுக்குரிய மிகமுக்கிய விரதங்களில் ஒன்றான மஹா சிவராத்திரி விரதம் இன்று(15) அனுஷ்ரிக்கப்படுகின்றது. அந்தவகையில் மட்டக்களப்பு திருப்பழுகாமம் ஸ்ரீ கௌரியம்பிகா சமேத கேதீஸ்வரநாதர்(சிவன்)ஆலயத்தில் மஹாசிவராத்திரி விரதமானது நான்கு சாமப் பூஜைகளுடன் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் போரதீவுப்பற்று பிரதேசசெயலகம் மற்றும் பழுகாமம் ஸ்ரீசிவன் ஆலயமும் இணைந்து நடாத்திய கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.இவ் மஹாசிவராத்திரி விரத பூஜை நிகழ்வுகளில் அதிகளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Share To:

Post A Comment:

0 comments so far,add yours