மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் மருத்துவராக பணியாற்றி வந்த 31 வயதான மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி ( MBBS ) அவர்கள் சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் (20) உயிரிழந்தார்.
அம்பாறை மாவட்டம் காரைதீவை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு அரசடியில் வசித்து வந்தவரும் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மருத்துவ படிப்பை நிறைவு செய்து பின் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் கடமையாற்றினார். பின்பு மட்டக்களப்பு வைத்தியசாலையில் கடமையை பொறுப்பேற்றார். இவர் ஒரு திறமையான மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)

Post A Comment:
0 comments so far,add yours