( வி.ரி. சகாதேவராஜா)
இராமகிருஷ்ண
மிஷன் துறவி சேவையின் சிகரம் ஸ்ரீமத் சுவாமி நடராஜானந்தரின் 59வது
சிரார்த்த தினமான 18.03.2026 இன்று புதன்கிழமை காரைதீவு பிரதேச
செயலகத்திற்கு முன்பாகவுள்ள சுவாமிஜியின் திருவுருவச்சிலையடியில்
நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது
கொடியேற்றம் (துறவறகீதம்), பஜனை, பகவான் ஸ்ரீ ராமகிருஸ்ண பரமஹம்ஷரின்
வேதபாராயணம் ,திருவுருவச்சிலைக்கு பூமாலை அணிவித்தலும், புஸ்பாஞ்சலியும்
இடம்பெற்றதுடன் ,
சேவையின் சிகரம் சுவாமி நடராஜானந்தரின் அறுபத்துநான்கு வருட வாழ்க்கை சரித்திர பதாதை திரைநீக்கம் செய்யப்பட்டதுடன்,
சுவாமியின் திருவுருவச்சிலைக்கான குடைபதாதை திரைநீக்கம் செய்யப்பட்டது.
அத்தோடு ஸ்ரீமத் சுவாமி நடராஜானந்தரின் நினைவாக பாடல் வெளியீடு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.







Post A Comment:
0 comments so far,add yours