மட்டக்களப்பு பிரதேசத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்த ஆட்கடத்தல் மற்றும் கிணற்றிலிருந்து பெண் மீட்கப்பட்ட சம்பவம், தற்போது மக்கள் மத்தியில் அதிக பேசுபொருளாகியுள்ளது. இந்தச் சிக்கலான வழக்கை மிகச் சாதூரியமாகத் துப்பறிந்து, உண்மைகளை வெளிக் கொண்டு வந்தவர் தெய்வநாயகம் மேனன்(IP) அவர்கள் இந்த அதிரடி நடவடிக்கை மற்றும் கடமை உணர்வு குறித்த முக்கிய தகவல்கள் சிறப்புற்று விளங்குகின்றது. கடமை தவறாத அதிகாரியான தெய்வநாயகம் மேனன் இந்த வழக்கில் ஆரம்பம் முதலே மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். மிகக் குறுகிய காலத்தில் குற்றவாளிகளைக் கண்டறிவதில் முக்கிய பங்காற்றினார். நுணுக்கமான ஆதாரங்களைச் சேகரித்து, கடத்தப்பட்ட பெண்ணை மீட்கும் வரை இவரது துப்பறியும் வேகம் ஓயவில்லை. ஒரு தீவிர முருக பக்தராக அறியப்படும் இவர், தனது நேர்மைக்கும் துணிச்சலுக்கும் ஆன்மீகமே பலம் என நம்புபவர். அம்பாரை"கரைதீவு"என்னும் பிரதேசத்தை சேர்ந்த இவர், தனது கடமையைச் சரியாகச் செய்ததில் ஆச்சரியமில்லை. சம்பவத்தின் பின்னணியை நோக்குகையில் கொத்தியாபுலை பகுதியில் மாயமான அந்தப் பெண் ஒரு கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட விதம் அனைவரையும் பதற வைத்தது. காவல்துறையினரின் முறையான விசாரணையும், தெய்வநாயகம் மேனன் போன்ற அதிகாரிகளின் துரித முடிவுகளுமே இன்று ஒரு பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்படக் காரணமாக அமைந்தது. சமூக வலைத்தளங்களிலும், மட்டக்களப்பு மக்கள் மத்தியிலும் இவரது இந்தச் சேவைக்கு பெரும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. கடமைக்காக எதையும் எதிர்கொள்ளும் இவரைப் போன்ற அதிகாரிகள் சமூகத்தில் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Share To:

Post A Comment:

0 comments so far,add yours