(கனகராஜா சரவணன்)
மட்டக்களப்பு குடும்பிமலை வயல் பிரதேசத்தில் சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகள் இரண்டுடன் இரு விவசாயிகளை நேற்று திங்கட்கிழமை (25) சி.ஜ.டி யினரால் கைது செய்யப்பட்டு ஓப்படைத்து ள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான நேற்று திங்கட்கிழமை அதிகாலையில் குடும்பிமலை வயல் பகுதியை சிஜடி யினர் சுற்றி வளைத்து முற்றுகையிட்டு சோதனை நடத்தினர்.
இதன் போது அந்த பகுதியில் ஒழித்து வைத்திருந்த சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிள் இரண்டை மீட்டதுடன் குடும்பிமலை வயல் வட்டானை தலைவரான 45 வயதுடையவர் மற்றும் விவசாயி ஒருவர் உட்பட இருவரை கைது செய்தனர்
இவ்வாறு கைது செய்த இருவரையும் சி.ஜ.டி யினர் ஒப்படைத்துள்ளதாகவும் இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

Post A Comment:
0 comments so far,add yours