உலக சாதனை நடன விழாவில் எமது மாணவியும் பங்குகொண்டார். கொழும்பு காலி முகத்திடலில் இன்று 5,000 கலைஞர்கள் பங்கேற்ற  பரதநாட்டிய நிகழ்வு உலக சாதனையாக அரங்கேறியது. 


இந்தியாவைச் சேர்ந்த 'சங்கமம் குளோபல் அகடமி' மற்றும் இலங்கையின் 'சங்கமிழ் லியா ஹொலிடேஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த மாபெரும் உலக சாதனை நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. உலகின் மிகப்பெரிய பரதநாட்டியப் பயிற்சிக்கான கின்னஸ் உலகச் சாதனை முயற்சியாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.வேப்பையடி கலைமகள் பாடசாலையின் வரலாற்றில் நடன சாதனை நிகழ்த்திய மணிமாறன் கிருஷியா எனும் மாணவிக்கும் அவரை ஆற்றுப்படுத்திய  நர்த்தனாலயா கலா மன்றத்தின் நடன ஆசிரியை பெரும் மதிப்பிற்குரிய கலாவித்தகர் திருமதி நிர்மலா தம்பிராஜா அவர்களிற்கும் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும். 

கிராமப்புற அதிகஷ்ட பிரதேச பாடசாலை ஒன்று உலக சாதனை நடன விழாவில் தனது ஆற்றுகையை வெளிப்படுத்துவதென்பது இதுவே வரலாற்று சாதனையாகும்

நர்த்தனாலயா கலா மன்றத்துடன் எமது பாடசாலையையும் இச் சாதனை பயணத்தில் இணைவதற்க்கு வித்திட்ட மதிப்பிற்குரிய   வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயஆசிரியர் திரு.பீ.ச.சசேந்திரா அவர்களுக்கும், இந்த நடன நிகழ்வில் மாணவியினை பங்கேற்க சம்மதித்து பக்கபலமாய் இருந்த திருமதி.ரூபா மணிமாறன் தம்பதிகளுக்குள் பாடசாலையின் அதிபர் க.தியாகராஜா, பிரதி அதிபர், ஆசிரியர், மாணவர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours