பாறுக் ஷிஹான்



சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு, பிரஜைகள் சாசனம் (Citizen Charter) மற்றும் அரச சேவைகள் தொடர்பான விழிப்புணர்வுத் தகவல்களை இலகுவாகக் கொண்டு சேர்க்கும் நோக்கில் தொலைக்காட்சி (Television) ஒன்று அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மனித மேம்பாட்டிற்கான பங்கேற்பு வழிகளை ஊக்குவித்தல்   எனும் சிறுமானிய திட்டத்தின் கீழ், சம்மாந்துறை சமூக மட்ட அமைப்புகளின் கூட்டமைப்பினால் (SCBOC) இந்த விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று திங்கட்கிழமை (06) சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா அவர்களிடம் குறித்த தொலைக்காட்சி உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலகக் கணக்காளர் எஸ்.எல். சர்தார் மிர்ஸா, நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம். ஜெமில், சமூக சேவை உத்தியோகத்தர் ஏ. அகமட் சபீர் மற்றும் சம்மாந்துறை சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

 
பொதுமக்களுக்கு அரச சேவைகள் தொடர்பான விபரங்களைத் திறம்படவும், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் எளிதாகவும் கொண்டு சேர்க்கும் இம்முயற்சிக்கு நிதியுதவி மற்றும் வழிகாட்டல்களை வழங்கிய சம்மாந்துறை சமூக மட்ட அமைப்புகளின் கூட்டமைப்பு, பொதுவான தளத்திற்கான தேடல் (Search for Common Ground) நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (UNDP) ஆகிய அமைப்புகளுக்கு சம்மாந்துறை பிரதேச செயலகம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours