(குமுக்கனிலிருந்து வி.ரி.சகாதேவராஜா)

 கதிர்காம பாதயாத்திரை செல்லும் அடியார்களின் நலன்கருதி கல்முனை ஆதார வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு ரோட்டரி கழகம் இணைந்து நடமாடும் வைத்திய முகாமை கானகத்தின் மத்தியில் உள்ள குமுக்கனில் நடாத்தி வருகின்றது. 

முகாமை வழிநடாத்தும் தலைவரான   கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளரும் மட்டக்களப்பு ரோட்டரி கழகத் தலைவருமான மருத்துவர் குண.சுகுணன் தலைமையிலான  குழுவினர் அர்ப்பணிப்புடன் இந்த சேவையை நடாத்தி வருகின்றனர்.

முதல் நாள் சுமார் 124 அடியார்கள் தமது முகாமிற்கு வந்து சிகிச்சை பெற்றதாக மருத்துவர் சுகுணன் தெரிவித்தார்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours