பாடசாலை விடுமுறை நாட்களில் பிள்ளைகள் சுதந்திரமாக ஓய்வெடுக்க வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது பிரதமர் இவ்வாறு கூறினார்.

பாடசாலை விடுமுறை நாட்கள் குழந்தைகள் ஓய்வெடுக்கும் நேரம் என்பதால், விடுமுறை நாட்களில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளின் மனதை தேவையற்ற முறையில் வருத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பாடசாலையை உயர் தரத்திற்குக் கொண்டு வருவதற்கும், பாடசாலைக் கல்வியில் பரீட்சை முடிவுகளை அதிகரிப்பதற்கும் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிள்ளைகளின் அர்ப்பணிப்பை அரசாங்கம் பாராட்டுகிறது என்றும் பிரதமர் கூறினார்.

இருப்பினும், குழந்தைகளின் கல்வி மற்றும் பரீட்சை முடிவுகளுக்கு மட்டுமல்லாமல், அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் தரத்திற்கும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.


ஒரு குழந்தை ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமல்ல, 13 ஆண்டுகளுக்குப் பாடசாலைக்கல்வி பெறுவதால், அவனது அல்லது அவளது எதிர்கால வெற்றியை பரீட்சை முடிவுகளால் மட்டும் தீர்மானிக்க முடியாது என்று பிரதமர் வலியுறுத்தினார்.


அதன்படி, குழந்தைகளின் வளர்ச்சி குறித்து ஆசிரியர்களும் பெற்றோர்களும் உணர்வுப்பூர்வமாகவும் சிந்தனையுடனும் இருக்குமாறு தாம் கேட்டுக்கொள்வதாகவும் அவர் மேலும் கூறினார்.


"குழந்தைகளுக்கும் விடுமுறை தேவை. எனவே, அவர்களுக்கும் விடுமுறை அளியுங்கள்," என பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Share To:

Post A Comment:

0 comments so far,add yours