வாழைச்சேனையிலிருந்து கல்முனைக்கு அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மாடுகளைக் கடத்திய இருவரை, காத்தான்குடி  பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், கடத்தலுக்குப் பயன்படுத்திய லொறியையும் பறிமுதல் செய்துள்ளனர்.
காத்தான்குடி பிரதான வீதியில் (02) காலை கடமையிலிருந்த பொலிஸார், வீதிச் சோதனையின் போது குறித்த லொறியை மடக்கிப்பிடித்தனர் எனவும்  லொறியில் கடத்தப்பட்டிருந்த 12 மாடுகள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours