த.தவக்குமார்
கிராம சக்தி வாழ்வாதார தொழில் முயற்சியின் கீழ் கோழி வளர்ப்புக்கான தொழில்நுட்ப பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி காரைதீவு-12 ம் பிரிவு கலைமகள் முன் பாடசாலையில் பிரதேச செயலாளர் திரு. சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஜனாப் கே.எல்.எம். ஹமீட் அவர்களும், கால்நடை வைத்திய அதிகாரி டாக்டர் .வு.சு. குலதுங்க அவர்களும், காரைதீவு 12ம் பிரிவு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர்,பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்வில் வளவாளர்களாக கால்நடை வைத்தியர் அதிகாரி காரியால உத்தியோகத்தர்கள் திரு. ஏ. ஜெயகாந்தன் அவர்களும் மற்றும் ஜனாப்.ஆ. ர். ரியால் அவர்களும் பங்குபற்றினார்







Post A Comment:
0 comments so far,add yours