(த.தவக்குமார்)
'சுதந்திர வானம்' தேசிய பட்டம் ஏற்றல் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலகத்தின் கலாசாரப் பிரிவின் ஏற்பாட்டில் காரைதீவு விக்னேஷ்வரா மகா வித்தியாலயத்தின் பாடசாலை மாணவர்கள்  பெற்றோர்களின் பங்குபற்றலுடன் காரைதீவு கடற்கரையில் நேற்று (16) இடம்பெற்றது. இந்நிகழ்வு பாடசாலை அதிபர் திரு.சி.திருச்செல்வம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர் திரு. சிவஞானம் ஜெகராஜன் அவர்களும் அதிதிகளாக பாடசாலையில் பிரதி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பிரதேச செயலக கலாச்சார பிரிவு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

நிகழ்வின் இறுதியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.





Share To:

Post A Comment:

0 comments so far,add yours