(கே.எஸ்.கிலசன்)
தேசிய ரீதியிலான தமிழ்மொழி தின வில்லுப்பாட்டு  போட்டியில் தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலயம் இரண்டாமிடத்தைப் பெற்று சாதனை படைத்தது.
கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில்  சனிக்கிழமை (14) நடைபெற்ற தேசிய மட்டத்திலான போட்டியிலேயே இப்பாடசாலையின் மாணவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். 
இப்பாடசாலை மாகாண மட்ட போட்டியில் முதலிடத்தைப் பெற்றிருந்ததோடு தற்போது கலைத் துறையில் பல முன்னேற்றங்களை கண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வில்லுப்பாட்டு குழுவில் பங்குபற்றிய மாணவர்கள் அவர்களை நெறிப்படுத்திய ஆசிரியர் மற்றும் அதிபருக்கும் பெற்றோர்கள் பெரும் பாராட்டையும் வரவேற்பையும் வழங்கியுள்ளறர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours