கே.கிலசன்

நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 7ம் கிராமம் 15ம் கிராமம் சந்தியடி பிள்ளையார் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று திங்கட்கிழமை (16) நடைபெற்றது. ஆலய தலைவர் ம.தயாநிதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் த.கலையரசன் அவர்களும் பிரதம குரு சிவஸ்ரீ சுதந்திரன் குருக்கள் ஆலய பூசகர் பொன்னையா மற்றும் இப்பகுதி இளைஞர்கள் பொதுமக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இயற்கை அழகோடு வயல் நிலத்தருகில் குடிசையில் வைத்து வழிபடப்பட்ட சந்தியடி பிள்ளையார் மடாலயமாக உருவாக்கப்பட இக்கிராமத்தின் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மேற்கொண்ட கடும் முயற்சியினாலேயே இவ்வாலயம் கட்டப்படுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours