எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய அரசாங்கமே மீண்டும் ஆட்சிக்கும் வரும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
'தமிழ் இலங்கையர் பாரம்பரி
ய மற்றும் நவீன கலைகள்' கலைஞர்களுக்கான அரச விருது வழங்கும் விழா கொழும்பில் இடம்பெற்றது.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சு இதனை ஏற்பாடு செய்திருந்தது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதை தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம் எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சிக்கும் வரும் என்ற நம்பிக்கை உள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours