(எஸ்.குமணன்)
காலநிலை மாற்றங்கள் காரணமாக கடந்த சில தினங்களாக சீரற்ற காலநிலை நிலவுவதால் அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்வதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
குறிப்பாக மருதமுனை பாண்டிருப்பு பெரியநீலாவணை சாய்ந்தமருது அட்டாளைச்சேனை நிந்தவூர் ஒலுவில் பொத்துவில் போன்ற பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு காற்றின் திசை மாற்றம், நீரோட்டத்தில் ஏற்ப்பட்டுள்ள திசை மாற்றம் கடல் நீரின் தன்மை வழமைக்கு மாறாக குளிர்ச்சியாக காணப்படுகின்ற காரணங்களால் கடல் அலைகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படுவதினாலும் கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
கடந்த 19ம் திகதி சாய்ந்தமருது பிரதேசத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடி இயந்திர படகில் கடற்றொழிலுக்கு சென்ற மூன்று மீனவர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் கரையோர பாதுகாப்பு பொலிசாரிடம் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.குறிப்பாக இவ்வாறான காலநிலை மாற்றங்களினால் கடலரிப்பு அதிகமாக ஏற்படுவதினாலும் கரையோர மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர்.

Post A Comment:
0 comments so far,add yours