(துதி,டிலான்)
கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் கூட்டுச் சனநாயகப் பணிக்குழுக் கூட்டம் இன்று களுதாவளையிலுள்ள கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் தலைமை அலுவலகத்தில் பணிக்குழுவின் பிரதம இணைப்பாளர் கலாநிதி சு.சிவரெத்தினம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு எடுக்கவேண்டிய அரசியல் நிலைபாடு குறித்து ஆழமாக ஆராயப்பட்டதுடன், கிழக்கின் இன்றைய களநிலை, கிழக்குத் தமிழர்களின் எதிர்கால இருப்பு மற்றும் கிழக்குத் தமிழர்கள் எதிர்நோக்கும் சமூக, பொருளாதார, அரசியல் சவால்கள் என்பன குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
கலந்துரையாடலின் முடிவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச அவர்களின் தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சியில் களம் இறங்கியிருக்கும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபயராஜபக்ச அவர்களை ஆதரிப்பது என்ற தீர்மானத்திற்கமைவாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபயராஜபக்ச ஆகிய இருவரையும் நேரில் சந்தித்துக் கிழக்குத் தமிழர்களின் அரசியல் மற்றும் அபிவிருத்தி சம்பந்தமான கோரிக்கைகளை அறிக்கை வடிவில் கையளிப்பதற்காக என்னென்ன விடயங்கள் உள்ளடக்கப்படவேண்டும் என்பது பற்றியும் விரிவாகக் கலந்துரையாடப் பெற்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post A Comment:
0 comments so far,add yours