(சா.நடனசபேசன்)
கல்முனை  வலயக்கல்வி அலுவலகத்தின் தமிழ்ப் பாடத்திற்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் கண வரதராஜன் அவர்களது  சேவையினைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு  கல்முனை வலய முதன்மொழி ஆசிரியர் மையத்தின் ஏற்பாட்டில் 28 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை மண்டபத்தில்  கல்முனை வலய முதன்மொழி ஆசிரியர் மையத்தின் தலைவர் கலாநிதி பிர்தௌஸ் சத்தார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல்.ஜலீல் கௌரவ அதிதியாக ஓய்வுபெற்ற உதவிக்கல்விப்பணிப்பாளர் வ.சுப்பிரமணியம் உட்பட உதவிக்கல்விப்பணிப்பாளர்கள், ஆசிரியஆலோசகர்கள், அதிபர்கள்,ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது உதவிக் கல்விப் பணிப்பாளர் கண வரதராஜன்  அவர்களது சேவைதொடர்பான விடைதரு விழா எனும் நூல் வெளியீட்டுவைக்கப்பட்டதுடன் நினைவுச்சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.





























Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours