பிரான்ஸில் இருந்து இரா. தில்லை நாயகம்


சுவிட்சர்லாந்தில் தாயக கலைஞர்களுக்கு மதிப்பளிப்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது.


 நேற்று  மாலை பேர்ண்(Bern) மாநிலத்தில் உள்ள ஞானலிங்கேசுவரர் திருக்கோவிலின் சைவநெறிக் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், தாயகத்தின் மூத்த இசையமைப்பாளரான இசைவாணர் கண்ணன் அவர்களும் அவரது மகனான இசையமைப்பாளர் சாய்தர்சனும் வரவேற்கப்பட்டனர். 

 நிகழ்வில் சிறப்புரையை தாயகப் பாடகியான திருமதி. மணிமொழி கிருபாகரன் நிகழ்த்தியதனை தொடர்ந்து, திருக்கோவிலின் பிரதான குருக்களினால் பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப் பட்டனர். 

இதனைத் தொடர்ந்து இசைவாணர் கண்ணன் அவர்களுடன் இணைந்து கலைஞர்களினால் பக்தியிசை நிகழ்வு நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் கலைஞர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் உட்பட பெருமளவு பொதுமக்கள் பங்குபற்றியிருந்தனர்.








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours