மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பொலிஸ் பிரிவில் தனியார் காணியொன்றிலிருந்து வயோதிபத் தாய் ஒருவர் இன்று செவ்வாய்கிழமை  காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுணதீவு பிரதான வீதி சுற்றுவட்டத்தின் அருகிலுள்ள தனியார் காணி ஒன்றில் குறித்த வயோதிபப் பெண் இறந்த நிலையில் இன்று காலை மீட்கப்பட்டதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு இறந்தவர் மண்முனை மேற்கு பிரதேசத்திலுள்ள ஊத்துமடு கிராமத்தைச்சேர்ந்த 80 வயதுடைய  பூமணி என உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours